Thursday, August 17, 2017

மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க, விசேட நீதிமன்றம் : ஜீ எல் பீரிஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க, விசேட நீதிமன்றம் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் நேற்று மே
ற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு எதிராக விசேட நீதிமன்றம் அமைத்து, வழக்கு தொடர்ந்து, தண்டனை வழங்கி, சிறையில் அடைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தயோசனை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து தாம் வேதனை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 87 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் அண்மையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் விடயங்கள் குறித்து பிரதமர் எவ்வாறு அறிந்துள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment