Friday, June 2, 2017

மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் குண்டுப்புரளி – இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
விமானம் அவுஸ்திரேலியாவிலிருந்து பறந்த சிறிது நேரத்தில் வெடிகுண்டு பீதி காரணமாக மெல்போர்னில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
விமானத்தில் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.
 
சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான சேவகர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment