Tuesday, May 2, 2017

காலி முகத்திடல் சென்ற பா.உறுப்பினர்களால் ஸ்ரீ.சு.கட்சியில் பிளவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
 
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு
மென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஒரு தரப்பு உறுப்பினர்கள்
யோசனையை ஆதரித்துள்ள நிலையில் மற்றுமொரு தரப்பினர் குறித்த இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 
குறிப்பாக காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின், உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(03) கூட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment