Tuesday, April 7, 2015

இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம்: பொது பலசேனா!

Tuesday, April 07, 2015
இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் கண்­டு­கொள்­ள­வில்லை. இன்­றையஆட் ­சி­யா­ளர்­களும் கண்­களை மூடிக்­கொண்டே உள்­ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா. இனி­மே­லா­வது ''ஜிகாத்''தை தடை­செய்ய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென் றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

இது தொடர்­பாக பொது பல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கையில், இலங்­கைக்குள் மெது­வாக ஊடு­ரு­விய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவி­ர­வாதம் இன்று நாடு முழு­வதும் வியா­பித்து விட்­டது. இன்று அவ்­வி­யக்கம் இந்­தி­யாவை அழிப்­ப­தற்கும் தாக்­கு­தல்­களை நடத்­தவும் திட்­ட ங்­களை தீட்டி வரு­வ­தா­கவும் இங்கு அவ்­வி­யக்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் இந்­திய உளவுப் பிரி­வினர் எமது நாட்­டுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இவ் அறிவிப்பை மதிக்­காமல் இருக்­க­லா­காது. எனவே, அர­சாங்­கமும் எமது உளவுப் பிரி­வி­னரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.

No comments:

Post a Comment